Site icon Tamil News

ஆஸ்திரேலியாவிற்கு அளவுக்கு அதிகமான குடியேற்றவாசிகள் அழைத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவிற்கு வரம்பற்ற புலம்பெயர்ந்தோரை வரவழைத்து பல நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது.

தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் வீட்டு நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இந்த பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வரவு செலவு திட்ட 2023-24 நிதியாண்டில் 315,000 புலம்பெயர்ந்தோரின் ஒதுக்கீட்டை முன்மொழிந்தது.

ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் 413,530 பேர் பல்வேறு விசா வகைகளின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலை நீடித்தால், ஆண்டு இறுதிக்குள் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

முந்தைய லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் மோசமான குடியேற்ற நடைமுறைகள் மற்றும் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் மோசமான குடியேற்ற நடைமுறைகள் இதற்குக் காரணம் என்று One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது.

Exit mobile version