Site icon Tamil News

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 10 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நேற்று (12.01) இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிங்டிங்ஷானில் நடைபெற்ற இந்த விபத்து எரிவாயு வெடிப்பின் காரணமாக ஏற்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் படி தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு ஏற்பட்ட போது 425 நபர்கள் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்ததாக மாநில செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

சின்ஹுவா அறிக்கையின்படி, சுரங்கத்திற்கு காரணமானவர்களை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதுடன், விசாரணைகளை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version