Site icon Tamil News

மொனராகலையில் இளம் பிக்கு துஷ்பிரயோகம்; பெரிய பிக்கு கைது!

விகாரையில் வைத்து 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவரை பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 49 வயதான தேரர் கடந்த (07) ஒக்கம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேக நபரான பெரிய பிக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 02 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை 03/03/2024 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version