Site icon Tamil News

பிரான்ஸில் கார் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் கிடந்த இளைஞனின் சடலம்

பிரான்ஸில் எரியூட்டப்பட்ட கார் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். ஆனால் அதற்குள்ளாக நிலமை கைமீறிச்சென்றுள்ளது.

எரிந்த மகிழுந்துக்குள் இருந்து ஆண் ஒருவருடைய சடலத்தை அவர்கள் மீட்டனர்.

அவர் 28 வயதுடையவர் எனவும், Nord மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் உள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

Exit mobile version