Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர வபத்தில் இளைஞர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று மின்காம்பத்துடன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பலாலி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

மற்றுமொரு இளைஞர் படுகாயடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

வருகின்றார் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று பலாலி சந்தியில் மின் கம்பத்துடன் மோதிய கோர விபத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

சம்பவத்தில் பலாலி பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் அபி வயது 18 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் உடற்கூற்று சோதனைக்காக வைககப்பட்டுள்ளது பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version