Site icon Tamil News

ஜேர்மனியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக படுகொலை

ஜேர்மன் பிராங்பேர்ட் பிரதான ரயில் நிலையத்தில் 27 வயது நபர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் துருக்கிய குடியுரிமை கொண்ட 54 வயதுடையவர்.

அவர் பின்னால் சென்று பாதிக்கப்பட்டவரை அணுகி திடீரென தனது கையை உயர்த்தி, அந்த நபரின் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டார்.

27 வயதான நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி விரைவாக அந்த இடத்தை விட்டு ஓடி . , மற்றொரு platform இல் அவர் பொலிசாரிடம் சிக்கினார்.

பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் என்ன தொடர்பு என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Exit mobile version