திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செந்தூர் பகுதியில் படகு கவர்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி மதுரங்குடா-செந்தூர் பகுதியைச் சேர்ந்த சுதேந்திரன் ஜனூஷன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.