Site icon Tamil News

இலங்கையில் பெண் ஒருவரின் மோசமான செயல் – சுற்றிவளைத்த பொலிஸார்

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ஐஸ் போதைப்பொருளை கடத்திய பெண்ணொருவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு, 05 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் 16,500 ரூபா பணத்தையும் கடத்திய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version