Site icon Tamil News

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணுக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளத.

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் ஜெர்மனி பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞனை தேடி புதுச்சேரி பொலிஸார் பெங்களூரு சென்றுள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தங்கி, சமூக சேவை செய்து வருகிறார்.

இவர், பெங்களூருவில் உள்ள தோழியை பார்க்க, கடந்த மாதம் 7ம் திகதி இரவு புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

பேருந்து புறப்பட்ட சற்று நேரத்தில், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 22 வயது இளைஞன் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்..

ஆத்திரமடைந்த ஜெர்மன் பெண், அந்த இளைஞனை தாக்கி திட்டினார். அதனையொட்டி, பேருந்து நடத்துனர் அந்த இளைஞனை நடுவழியில் இறக்கிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து ஜெர்மன் பெண் ஒன்லைனில் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தில் முன் பதிவை ஆய்வு செய்தார்.

அதில், ஜெர்மன் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதும், அவரது முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அந்த இளைஞன் கைது செய்ய உருளையன்பேட்டை பொலிஸார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

Exit mobile version