Site icon Tamil News

சிங்கப்பூரில் பல இளைஞர்களை காதல் வலையில் விழவைத்து பணம் பறிக்கும் பெண்

சிங்கப்பூரில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான 49 வயதுடைய பெண் ஒருவர், தன்னைவிட வயது குறைவான இளைஞர்களை திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்து பணம் பறித்ததாக தெரியவந்துள்ளது.

தன் குடும்பத்தை ஏமாற்றி, பெற்றோர் சேமித்து வைத்திருந்த சுமார் 150,000 சிங்கப்பூர் வெள்ளியையும் பெண்ணிடம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பெண் மேலும் இரண்டு இளம் ஆண்களை காதல் வலையில் விழவைத்து, இருவரையும் நேரில் சந்திக்காமலேயே 150,000 சிங்கப்பூர் வெள்ளிக்கும் மேல் பணத்தை பறித்துள்ளார்.

2016 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில், அந்தப் பெண் 10 பேரிடம் இருந்து சுமார் 880,448.40 சிங்கப்பூர் வெள்ளி பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஆன்லைனில் சந்தித்த பிற நபர்களும் அடங்குவர்.

பிணையில் வெளியே வந்த அந்த பெண், மேலும் இந்த குற்றங்களில் சிலவற்றை செய்தததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Exit mobile version