Site icon Tamil News

கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!

புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேற்று (20.10) குறித்த பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கேமுல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லியங்கேமுல்ல, சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version