Site icon Tamil News

இலங்கையில் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

40 வயதுக்கும் மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இன்றி இருக்கும் பட்சத்தில், 2500 ரூபாய் அபராதம் செலுத்தியே தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த தொகையை செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெருகின்றவர்கள் முன்னதாக செலுத்திய 250 ரூபாவை செலுத்தி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version