Site icon Tamil News

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின்  பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 1,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வட மாகாணத்தில் 1,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை (16ஆம் திகதி) வெளியிடப்படலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version