கனமழைக்கு மத்தியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள குளத்தில் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டது.
வாகனத்தின் சாரதி தடை போட்டு வாகனம் குளத்தில் விழுவதைத் தடுக்க முயன்றதாகவும், ஆனால் முன் சக்கரங்கள் இரண்டும் தண்ணீரில் இறங்குவதைத் தடுக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் வாகனங்கள் விழுவது வழமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.