Site icon Tamil News

திருகோணமலையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் – பரிதாபமாக பலியான சிறுமி !

திருகோணமலை-உட்துறைமுக வீதியில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் திருமலை டொக்யாட் வீதி இணக்கம் 156/6 இல் வசித்து வரும் எட்ரிக் செர்லின் (09) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு வேனொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய தாயாருக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட போது குறித்த தாயாருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனக்குடா பகுதியில் இருந்து வேனில் தாயாரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு செல்லும் வேளையில் எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் இதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

Exit mobile version