Site icon Tamil News

ராத்கராவ பகுதியில் பயணிகளுடன் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

இன்று காலை ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்துவிபத்துக்குள்ளானதில் ஓட்டுநரும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பொரலந்த பகுதியில் அமைந்துள்ள தமது வீடுக்கு திரும்பிய போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ் விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version