Site icon Tamil News

பிரான்ஸில் ரயிலில் ஏற்பட்ட பரபரப்பு – சகோதரர்களுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் Meaux – Paris நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரயில் ஒன்று Chelles (Seine-et-Marne) நிலையத்தை வந்தடைந்தது.

இதன் போது, அதில் பயணித்த ஆயுததாரி ஒருவர் இருவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

23 மற்றும் 28 வயதுடைய ஒரு சகோதர்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றது.

காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயுததாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவர் தேடப்பட்டு வருகிறார். முன் பகை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Exit mobile version