Site icon Tamil News

துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து : 09 பேர் பலி!

துருக்கியில் நகரங்களுக்கு இடையே பயணித்த பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி மேம்பாலம் தூணில் மோதியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள பொலட்லி நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆளுநர் வசிப் சாஹின் தெரிவித்தார்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள இஸ்மிர் நகரில் இருந்து அந்நாட்டின் கிழக்கில் உள்ள அக்ரி நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தை மூடுவதற்கு வழிவகுத்த விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version