Site icon Tamil News

ரஷ்யாவின் பரபரப்பான நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து : பலர் படுகாயம்!

ரஷ்யாவின் பரபரப்பான நெடுஞ்சாலையில் பயணிகள் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வண்டி நெடுஞ்சாலையில் இருந்த ட்ரம்ப் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. சாரதி வேகத்தை அதிகரிக்க முற்பட்ட நிலையில், வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த ட்ரம்ப் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 80 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version