Site icon Tamil News

பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர்… கொலை செய்து எரித்த 3 சிறுவர்கள் கைது!

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வெட்டிக்கொலை செய்து எரித்த மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு டெல்லி பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் நேற்று கிடந்தது. பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர், ஆசாத் அகமது(25) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 16 வயது சிறுவனைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்ட சிறுவனை, ஆசாத் அகமது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் சிறுவன் கூறினார். இதையடுத்து அவரை கொலை செய்ய மூன்று சிறுவர்களும் முடிவு செய்தனர்.

இதன்படி ஆள் அரவமற்ற இடத்திற்கு ஆசாத்தை வரவழைத்து 16 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதன் பின் அவரது உடலை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அவரது இரண்டு நண்பர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் 17 வயதாகிறது.

Exit mobile version