Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் திடீரென குவியும் சுற்றுலா பயணிகள்

ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டிற்கு பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொந்தமான சுற்றுலா மையமான சாண்டோரினி தீவை நோக்கியே மக்கள் இவ்வாறு படையெடுத்து வருகின்றனர்.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் அமைந்துள்ள சாண்டோரினி தீவு கரடுமுரடான நிலப்பரப்பை கொண்டுள்ளது.

வெள்ளையடிக்கப்பட்ட கனசதுர வீடுகள் கொண்ட தீவில் இருந்து கடற்கரை அழகை காணும் வகையில் குன்றுகளின் உச்சியில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட தீவுக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வருகை தருவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Exit mobile version