Site icon Tamil News

காதலியுடன் ஜங்கிள் பீச் சென்ற மாணவனை காணவில்லை

தனியார் கல்வி நிறுவனமொன்றில்  கல்வி நடவடிக்கையில கலந்துகொள்ள செல்வதாக கூறிவிட்டுச் சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற போது அலை அலையில் சிக்கியதாக மாணவி பொலிஸாரிடம் கூறியபோதும் மாணவனின் உறவினர்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதன்படி, காலி, வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் படிப்பில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

17 வயதான சேனுகா தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மாலையில் தனது 21 வயது காதலியுடன் காலி ஜங்கிள் பீச் சென்றது பின்னர் தெரியவந்தது.

ஜங்கிள் பீச்சில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் விழுந்ததாக குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகாவின் உறவினர்களுக்கு, மாணவி கூறிய உண்மைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாம் விசாரனை செய்த போது, ​​சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version