Site icon Tamil News

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.பல்கலைக்கழக கலைப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சகிந்தன் என்ற 22 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) காலை நீர்வேலி பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் நாய் ஒன்று பாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version