Site icon Tamil News

சக நண்பர்களின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி! பின்னணியில் வெளியான காரணம்

நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை அருந்திய 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது

குறித்த பாடசாலையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே தரத்தில் படிக்கும் சக மாணவர்களுடன் இருந்த முன்விரோதம் காரணமாக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version