Site icon Tamil News

திருச்சியில் சத்துமாத்திரைகளை உட்கொண்ட மாணவன் உயிரிழப்பு!

திருச்சி செம்பட்டு அடுத்துள்ள திருவளர்ச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பர்ட்(14).

திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாணவனுக்கு பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் அம்மாணவனுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் மாணவனோ கடந்த ஒன்றாம் திகதி பள்ளியில் இருக்கும் பொழுது பத்து மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபவித்தனர். அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பழைய இன்றி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து குறைவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version