நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் எரிந்த நிலையில் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான அரசரத்தினம் துஷ்யந்தன் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.