Site icon Tamil News

ஜெர்மனியில் 19 வயதுக்கும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் அதிர்ச்சி செயல்

ஜெர்மனியின் ஹம்பேர்க் பகுதியில் 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட பல இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவர்கள் மீது மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பெண் மாவட்ட நீதிபதியானவர் கடந்த செவ்வாய்கிழமை இவர்களுக்கு தண்டனைகளை வழங்கியுள்ளார்.

முக்கிய குற்றவாளிக்கு 2 அரை வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த பெண் நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த பயமுறுத்தலுக்கு எதிராக பிரதேச நீதிபதியின் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், பெண் நீதிபதிக்கு எதிராக விடுக்கப்பட் பயமுறுத்தல் சம்பவம் ஆனது ஜெர்மனியுடைய ஜனநாயக விழுமியங்களுக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்று கூறி இருக்கின்றார்.

Exit mobile version