Site icon Tamil News

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 20 பிரம்படிகளும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 18 வயதான முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர், குற்றத்தில் ஈடுபடும்போது முழுநேர தேசிய சேவையாளராக பணிபுரிந்துள்ளார்.

பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளையரை பாலியல் ரீதியாக பாதிக்கச் செய்த ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான மற்ற ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது, அனைவரும் மது போதையில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியின் நண்பர் அஸ்ரி என்பவரின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version