Site icon Tamil News

ஸ்பெயினில் 500 ஆண்டுகள் பழைமையான பிரேத பெட்டியை தோண்டி எடுத்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு பரிபூரணமாக பாதுகாக்கப்பட்ட துறவி ‘கடவுளின் அற்புதங்களில்’ ஒன்றாகப் போற்றப்படுகிறார்.

1582 இல் இறந்த அவிலாவின் புனித தெரசா என அழைக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவரின் உடலம் கடந்த மாதம் ஸ்பெயினில் உள்ள ஒரு தேவாலயத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய உடல் அழுகவில்லை என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழு 1914 இல் எடுக்கப்பட்ட எச்சங்களின் படங்களை தற்போதுள்ள நிலையில்  ஒப்பிட்டுப் பார்த்தது. இதன்போது அவருடைய முகம் இன்னும் ‘தெளிவாகத் தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

செயின்ட் தெரசாவின் எச்சங்களைப் படிக்கவும், வாழ்நாளில் அவரைப் பாதித்த உடல்நிலைகளைப் புரிந்து கொள்ளவும் பளிங்குக் கல்லால் மூடப்பட்ட வெள்ளி சவப்பெட்டி திறக்கப்பட்டது.

புனித தெரசாவின் உடல் ஆகஸ்ட் 28 அன்று ஸ்பெயினில் உள்ள அவிலா மறைமாவட்டத்தில் ஆணைப் பொது போஸ்டுலேட்டரான மார்கோ சீசாவால் தோண்டி எடுக்கப்பட்டது.

ஸ்பானிஷ் கன்னியாஸ்திரியான அவர், தேவாலயத்தில் மருத்துவராக தரமுயர்த்தப்பட்ட முதல் கன்னியாஸ்திரியாவார். இந்த உயரிய கௌரவம் 1970 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதாக புனித நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

தேவாலயத்தின் கோட்பாட்டின்படி  குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக இறந்த புனிதர்களுக்கு வழங்கப்படும் மரியாதையாக இந்த உயரிய கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை  1622 ஆம் ஆண்டு புனித தெரேசா என்ற கௌரவ பட்டமும் அவருக்கு  வழங்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

Exit mobile version