பிரான்ஸ் தலைநகர் பாஅதிர்ச்சி2sc3ரிஸில் வசிக்கும் யூத குடும்பத்தினரின் வீடு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- காஸா மோதலின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யூத குடும்பத்தினரின் வீட்டின் வாசலில் பெற்றோல் ஊற்றி வீடு எரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 19ஆம் திகதி 20 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யூத குடும்பத்தினரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த எரிப்பு சம்பவத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் பெரிதளவில் இடம்பெறவில்லை என்றபோதும், அக்குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
விசாரணைகளில், இந்த தாக்குதலை மேற்கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரே என தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.