Site icon Tamil News

சிங்கப்பூரில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் உணவு விநியோகிக்கப்பட்ட பையில் எலி நசுங்கிக் கிடந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை விசாரிப்பதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

Annabella Patisserie கடையிலிருந்து வாங்கிய brownies கேக் விநியோகிக்கப்பட்ட பையில் அந்த எலி இருந்ததாக Farahliza , Facebook பக்கத்தில் கூறினார்.

உணவு இருந்த பை மூடப்பட்டிருந்ததாகவும் வாசல் கதவில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

விநியோகிக்கப்பட்ட 3 நிமிடங்களில் அவர் பையை எடுத்துக்கொண்டார். பையிலிருந்து மோசமான வாடை வந்ததாக அவர் குறிப்பிட்டார். கேக்கை வெளியே எடுத்தபோது பையில் இறந்த எலி கிடந்ததாக அவர் கூறினார்.

அதை Nordcomm II நிறுவனம் விநியோகித்ததாக Annabella Patisserie குறிப்பிட்டுள்ளது. சம்பவம் விசாரிக்கப்படும் வரை அதன் சேவைகளை ரத்து செய்வதாக Annabella Patisserie தெரிவித்தது.

Patisserie தொடர்புகொண்டு முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்கப்போவதாக Annabella Patisserie குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version