Site icon Tamil News

இலங்கையில் பேருந்தில் பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கம்பளை, ஜயமாலபுர பகுதியில் பேருந்தில் பயணித்த நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று, நேற்று காலை 6 மணியளவில் கம்பளையிலிருந்து மாவெல பகுதியை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணி ஒருவர் மீது ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர், வேனில் வந்த குழுவினர் குறித்த நபரை, கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றிவருபவரென தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கடமைகளுக்காக சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த நபர், அவரது சகோதரனின் மகனால் கடத்தப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் பொருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version