Site icon Tamil News

தெற்கு அட்லாண்டிக் கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்து : 09 மாலுமிகள் உயிரிழப்பு!

தெற்கு அட்லாண்டிக் கடலில் 200 மைல் (320 கிலோமீட்டர்) தொலைவில் பால்க்லாண்ட் தீவுகளில் மீன்பிடிக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒன்பது மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

176 அடி (54 மீட்டர்) அடி கொண்ட ஆர்கோஸ் ஜார்ஜியா என்ற கப்பல் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

14 பணியாளர்கள் உயிர்காக்கும் படகுகளில் சென்று, ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் இரு ஸ்பானியர்களும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27 பேர் கொண்ட குழுவில் 10 ஸ்பானியர்கள், எட்டு ரஷ்யர்கள், ஐந்து இந்தோனேசியர்கள், இரண்டு உருகுவேயர்கள் மற்றும் இரண்டு பெருவியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version