Site icon Tamil News

இடைத்தேர்தலில் சுனக்கிற்கு பின்னடைவு

ரிஷி சுனக் பிரிட்டனில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு இடங்களில் தோல்வியடைந்தது.

வடக்கு இங்கிலாந்தில் உள்ள செல்பி-ஐன்ஸ்டி தொகுதியில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கடந்த காலங்களில் இங்கு கன்சர்வேட்டிவ் கட்சி 20,000க்கும் அதிகமான பெரும்பான்மையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், சோமர்செட்-ஃப்ரோம் தொகுதியை லிபரல் டெமாக்ராட்ஸ் வென்றது. கன்சர்வேடிவ் கட்சி Uxbridge-South Ruislip தொகுதியில் வெற்றி பெற்றது.

அங்கு வெறும் 495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த தொகுதியை பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வென்றிருந்தார்.

இந்த இடைத்தேர்தல் சுனக் அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களுக்கான வாக்காளர்களின் தீர்ப்பாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்,

மேலும் சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகிறது, எனவே இந்த முடிவுகளில் அதிக ஆர்வம் உள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளில் எதிர்மறையான முடிவுகள் சுனக்கின் தலைமை மீதான அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version