Site icon Tamil News

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், அவசரமாக இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ICAO) நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இ-பாஸ்போர்ட் அறிமுகமானது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்ட புதிய இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும்.

இது நாட்டின் பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசையை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version