Site icon Tamil News

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான ரஷ்மிகா விடுத்துள்ள கோரிக்கை

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான இந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது போன்ற போலியான காணொளிகள் பகிரப்படுவதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற காணொளிகள் மூலம் தங்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக இளம் பெண்கள் நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தவிர, இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், டீப்ஃபேக் காணொளி காரணமாக தாம் எதிர்கொண்ட நிலைமை மிகவும் பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ்-இந்திய பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ராஷ்மிகா மந்தனாவின் படத்தைச் சேர்த்ததால் இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

Exit mobile version