Site icon Tamil News

வானில் தோன்றிய அரிய காட்சி : ஐரோப்பிய மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பூமியைப் பாதித்த ஒரு பெரிய சூரிய புயல் காரணமாக, பூமியின் வடக்குப் பகுதி மக்கள் வடக்கு ஒளி நிகழ்வான அரோரா பொரியாலிஸைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர்.

அதன்படி, ஐரோப்பிய நாடுகளின் வானம் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருந்தது.

சூரியனில் இருந்து பலத்த சூரியக் கசிவினால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, இது 21 ஆண்டுகளில் பூமியைத் தாக்கும் வலுவான புவி காந்த புயல் மற்றும் இது ஐந்தாவது அல்லது G5 நிலை ஆகும்.

அதன் தாக்கம் உலகளாவிய மின் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை பாதிக்கலாம்.

மின்சாரம் தடை, மொபைல் போன் நெட்வொர்க் செயலிழப்பு, ரேடியோ சிக்னல் செயலிழப்பு மற்றும் செயற்கைக்கோள் குறைதல் போன்ற பேரழிவுகள் இதில் அடங்கும்.

கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதுபோன்ற சூரியப் புயல் பூமியை பாதித்தது. இதானால் ஸ்வீடன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மின் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version