Site icon Tamil News

பப் ஒன்றின் மேலாளர் சடலமாக மீட்பு

பிபில நகரில் உள்ள ஒரு நாட்டு மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரின் சடலம் இன்று (30) கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த கயான் இந்திக்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழு அங்கு சென்று இந்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

அவரைக் கொன்ற கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ இதுவரை வெளியாகவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

Exit mobile version