Site icon Tamil News

வடக்கின் புதிய ஆளுநருக்கு எதிராக போராட்டம்

வடமாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எம்.எஸ்.சார்ள்ஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (19) யாழ்.மாநகர சபை வீதிக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அவர் வடக்கில் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றியதாகவும், ஆனால் அந்த காலப்பகுதியில் அவர் மாகாணத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்கவில்லை என்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

அவர் மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது அவரது திறமையால் அல்ல என்றும் தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த பங்களிப்பின் காரணமாகவே என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதாகவும், அவர் ஆளுநராக இருந்த காலத்தில் அவர் தனது குடும்பத்திற்காக சம்பாதித்த சட்டவிரோத சொத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version