Site icon Tamil News

இந்தோனேஷியாவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல்ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி , ஜகார்த்தா நேரப்படி 07.22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சி்க்கு வடகிழக்கே 96 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேஷியாவில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Exit mobile version