Tamil News

சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் கலை நிகழ்வொன்றில் மோட்டார் சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம் பெற்றுள்ளது.

கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 17ம் திகதி தொடக்கம் கலை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்த நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் லைட் வீதியில் வசித்துவரும் ஜானக சுரஞ்ஜீவ (45) பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version