Site icon Tamil News

நைஜீரியாவில் மசூதி ஒன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; 24 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நேற்று(15) நடத்தப்பட்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கானோ மாகாணம் , கடான் கிராமத்திலுள்ள மசூதியில் 38 வயது நடபர் நடத்திய தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 24 பேர் உயிரிழந்தனர.அவர்களில் 4 பேர் சிறுவர்கள்.

இந்தத் தாக்குதல் பெற்றோல் குண்டு வீசி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் மதப்பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே காரணம் எனவும் கருதப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version