நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையத்தில் சேவை பெற்றுக் கொண்டிருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் 1919 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.