Site icon Tamil News

ராகம வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் உயிரிழப்பு!

ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.

கோ-அமோக்ஸிக்லாவ் என்ற தடுப்பூசியை செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version