Site icon Tamil News

லண்டனில் அத்துமீறி வீடொன்றுக்குள் நுழைந்த நபர் சுட்டுக் கொலை!

லண்டனில் வீடொன்றுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு லண்டனில் உள்ள சவுத்வேல்ஸில் உள்ள வீட்டிற்குள் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நுழைய முயல்வதாக பொலிஸ் அவசர சேவைக்கு வந்த அழைப்பின் பேரில் பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

மேலும், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அந்த நபர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்ற போது சந்தேக நபர் வீட்டினுள் சென்றுள்ளதாகவும் அங்கு பொலிஸார் அவரை சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version