இத்தாலியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Audi இன் முதலாளியான ஃபேப்ரிசியோ லாங்கோ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனியாக அடமெல்லோ மலைகளில் சிமா பேயரில் ஏறிக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.