Site icon Tamil News

இலங்கை : கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்!

கொழும்பு உடவலவையில் உள்ள வீடொன்றிற்குள் இருந்து,  சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று (17.04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அந்த வீட்டில் வசிக்கும் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டிற்கு அருகாமையில் கடையொன்றை நடாத்தும் தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டிற்கு வந்து தீக்குளித்ததாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பிலிபிட்டிய நீதவான் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version