Site icon Tamil News

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர்  வீட்டின் குளியல் அறையில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

55 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  சுவிஸ் நாட்டில் வசித்து வரும் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை  யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் , வீட்டார் சந்தேகம் அடைந்து குளியலறை கதவினை உடைத்து உள்ளே சென்றபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version