Site icon Tamil News

யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தன்னை துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்வதாக பாடசாலை அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் பலாலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பலாலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மாணவிகளிடம், வாக்குமூலங்களை பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version