Site icon Tamil News

தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை  தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version